பொன்னியின் செல்வன் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் காவியம் இந்த படத்தை தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
காரணம் தெலுங்கில் வெளியான பாகுபலி என்ற திரைப்படம் மக்களிடம் ஒரு பெரிய வரவேற்பு கிடைத்தது.
HISTORICAL MOVIE பாகுபலிக்கு மக்கள் கொடுத்த சப்போர்ட் மற்றவர்களுக்கும் இதுபோன்ற படமெடுக்க தைரியத்தைக் கொடுத்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் மணிரத்தினம் இறங்கினார்.
பல தடைகளுக்கு பிறகு கடுமையான முயற்சி செய்து படத்தை நல்லபடியாக முடித்து வருகின்ற 30 9 2002ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் பாகம் 1 திரையில் வெளியிட உள்ளார்கள்.
சோழர்களின் பெருமையை ஊருக்கு எடுத்துச் சொல்லப் போகும் பொன்னியின் செல்வனை ரசிகர்கள் கொண்டாட தயாராகி உள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரமும், அருள்மொழிவர்மன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும், வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தியும், குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும், நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும் நடிக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளியீடு தேதியுடன் நேற்று வெளியான புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதுபோல இன்று பொன்னியின் செல்வன் படக்குழு கரிகாலனாக நடிக்கும் விக்ரமின் கதாப்பாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
குதிரையில் கம்பீரமாக விக்ரம் அமர்ந்து இருப்பது போல புகைப்படம் வெளியானது. அதனை பார்த்த விக்ரம் ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவிக்கின்றனர்.