நடிகை ஜெயப்பிரதா இந்தியா முழுவதும் இவரை தெரியாத ரசிகர்களே இல்லை அந்த அளவிற்கு ஒரு பெரிய பிரபலம் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.
தமிழில் மன்மதலீலை சலங்கை ஒலி நினைத்தாலே இனிக்கும் ஏழைஜாதி தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு. மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஜெயப்பிரதா அவர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார் அவர் கூறும்போது மேக் அப் சரியாக இருக்குமோ இல்லையோ தலை முடி சரியாக இருக்கோ இல்லையோ என முதல் படத்தில் நடிப்பது போல் இருப்பேன்.
தாசரி நாராயண ராவ் எனது குரு. தேவுடே திகி வஸ்தே என்ற படத்தில் என்னிடம் நீச்சல் உடை அணியச் சொன்னார். நான் அணிய மாட்டேன் என்று சொல்லி ஒரு மணி நேரம் அழுதேன்.
நீச்சல் உடையில் ஆபாசமாக தெரியாது என்று சொல்லி கட்டாயப் படுத்தினார் ஒரு வழியாக நீச்சல் உடை அணிந்தேன். அந்த காட்சியை நீச்சல் குளத்தில் வைத்து படமாக்கினார்.
அந்த படத்துக்குப்பிறகு பிகினி உடை போட கூடாது என்று முடிவு செய்தேன் என்று ஜெயப்பிரதா கூறியுள்ளார்.