விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமாகி மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகை. முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்த விஜே சித்ரா படிப்படியாக தனது வாழ்க்கையை செதுக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு முன்னேறி தனக்கென்று ஒரு இடத்தை தமிழக மக்கள் மனதில் பிடித்திருந்தார்.
ஹேமந்த் என்பவரை தீவிரமாக காதலித்த சித்ரா திருமணத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டார். ஹேமந்த் சித்ராவின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சில ரகளைகள் செய்துள்ளார். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நெருக்கமாக நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டதாக தகவல்கள் வெளிவந்தது.
சித்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்றனர் அப்போது தனது கணவர் ஹேமந்த் வெளியில் நிற்க சொல்லி விட்டு உள்ளே சென்ற சித்ரா தூக்குப் போட்டுக் இறந்துவிட்டார்.
அன்று ஒரு நாள் இரவில் என்ன நடந்தது சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று மர்மமாகவே இருக்கிறது இன்று வரை. இது தற்கொலை இல்லை திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று ஒருபக்கம் பேசி வருகிறார்கள். சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் சமீபத்தில் தான் அவரது கணவர் ஹேமன் வெயிலில் வெளியில் வந்தார்.
இந்நிலையில் சித்ராவின் உறவினர் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவின் முகத்தை முகமூடியாக மாட்டிக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் .
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சு அசல் சித்ராவே திரும்ப வந்தது போல இருந்தது என்று கூறி வருகிறார்கள்.