நடிகை ஸ்ரேயா தமிழில் மழை என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமானார். ஆனால் மழை என்ற படத்திற்கு முன்னரே எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் ஹீரோவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதலில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரேயாவிற்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது அதனை தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்த ஸ்ரேயா அந்த நேரத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
ஸ்ரேயாவின் பெரிய பிளஸ் அவருடைய நடனம் மற்றும் தாராளம். கவர்ச்சி காட்ட மாட்டேன் என்றார் ரூல்ஸ் ஸ்ரேயாவிடம் இல்லாததால் இயக்குனர் முதல் தயாரிப்பாளர் வரை தன் படத்தில் சூர்யாவை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர்.சிவாஜி படத்தின் வெற்றி விழாவிற்கு ஸ்ரேயா போட்டு வந்த மினி கவுன் பார்ப்பவர்களை நெளிய வைத்தது.
ஸ்ரேயா பற்றி தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் 2011 ஆம் ஆண்டு மும்பையில் ஸ்பா ஒன்றை ஆரம்பித்துள்ளார் அதில் பார்வையற்றவர்களுக்கு வேலை கொடுத்துள்ளார் அந்த எண்ணம் வந்ததற்கு முக்கிய காரணம் ஸ்ரேயா படித்துவந்த பள்ளிக்கு அருகில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி இருக்குமாம் அங்கு சென்று சிறுவயதிலேயே அவர்களுடன் ஒன்றாக பழகி வந்தாராம். அதுமட்டுமல்லாமல் சத்தமில்லாமல் நிறைய உதவியும் செய்துள்ளார் ஸ்ரேயா.
ஸ்ரேயா ரஷியன் காதலன் ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் பாலிவுட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது கூட தனது காதல் கணவனை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்த போது அவர் வேண்டாம் என்று சொல்லியும் ஸ்ரேயா விடாமல் முத்தம் கொடுத்ததை மீடியாக்கள் வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். தற்பொழுது ஸ்ரேயா சரண் கணவர் மேல் ஏறி அமர்ந்து ரொமான்டிக் போஸ் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பிரைவேட் புகைப்படங்களை தயவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிடாதீர்கள் என்று கூறி வருகின்றனர்.