கொரோனா என்ற கொடிய நோயை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் பல மாதங்களாக ஆலோசனை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜோதிடர்கள் மற்றும் நியூமராலஜி கணிப்பாளர்கள் கொரோனா எப்பொழுது நாட்டை விட்டு போகும் என்று கணிக்க ஆரம்பித்து வருகிறார்கள்.
உலகமே கொரோனவினால் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராவ் என்பவர் கொரோனா நமது நாட்டை விட்டு போவதற்கு ஒரே வழி CORONA என்ற எழுத்தை CARONAA என்று மாற்ற வேண்டும் அது மட்டுமல்லாமல் COVID -19 என்பதை COVVIYD -19 என்று மாற்ற வேண்டும் இவ்வாறு மாற்றினால் கொரோனா நாம் நாட்டை விட்டுப் போகிவிடும்.
இந்தப் பெயர் மாற்றி கதவுகள் மற்றும் மக்கள் கூடும் இடத்தில் பேனர் வைத்தால் அனந்தபுரம் மாவட்டத்தில் மட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே கொரோனா போகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த மக்கள் சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியாமல் நொந்து போயுள்ளனர் மக்கள்.