நிக்கி கல்ராணி பெங்களூரை சேர்ந்த இவருக்கு வயது 30 இவர் தமிழ் படங்களில் முதன்முதலாக டார்லிங் என்ற படத்தில் அறிமுகமானார் ஜிவி பிரகாஷ் ஜோடியாக டார்லிங் என்ற படத்தில் நடித்து இருந்த இவர் முதல் படத்தில் பேயாக நடித்து மிரட்டிய இருந்தார்.
டார்லிங் படத்தை தொடர்ந்து அவருக்கு நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது நடிகர் ஆதியின் யாகவராயினும் நாகாக்க என்ற படத்தில் நடித்திருந்தார். கார்த்தியின் தேவ், ராகவ லாரென்ஸ் ஜோடியாக மொட்டை சிவா கேட்ட சிவா. ஜீவாவின் கீ, சுந்தர் சியின் கலகலப்பு2 மற்றும் கௌதம் கார்த்திக்கின் ஹர ஹர மகாதேவகி போன்ற படங்களில் நடித்து இருந்தார். நிக்கி கல்ராணி சசிகுமாருக்கு ஜோடியாக ராஜவம்சம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிக்கிகல்ராணி சென்னையில் ராயப்பேட்டையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். வீட்டில் அடிக்கடி விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போவதை கண்காணித்த நிக்கி கல்ராணி அண்ணா சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் வீட்டில் விலை உயர்ந்த பொருளை காணவில்லை என்றும் தனது வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் தனுஷ் என்பவர் தனியார் ஏஜென்சி மூலம் வேலைப் பார்க்க நியமிக்கப்பட்டவர் என்றும் அந்த புகாரில் கூறியிருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தனுஷ் தனது நெருங்கிய நண்பர் ஒருவரது வீட்டில் பதுங்கி இருப்பது தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நிக்கி கல்ராணி அவர்களின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போலீசார் அதில் நிக்கிகல்ராணி வீட்டில் வேலை செய்யும் தனுஷ் பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.
தனுஷை வலை போட்டு தேடிய போலீசார் தனுஷை கைது செய்து விசாரணை செய்தனர்.திருப்பூரில் கைதான தனுஷிடம் இருந்து நிக்கிகல்ரானியின் சில ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த சில பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தனுஷ் கொடுத்த வாக்குமூலத்தில் நிக்கிகல்ராணி அவர்கள் வீட்டிலிருந்து விலை உயர்ந்த கேமராவை திருடி விற்றதாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் நிக்கி கல்ராணி தரப்பிலிருந்து வழக்கை வாபஸ் பெற்றதால் தனுஷை போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.