Home NEWS ஜிம் உரிமையாளருடன் சென்ற மனைவி… மீட்டுத்தரக்கோரி கணவன் கண்ணீர்!

ஜிம் உரிமையாளருடன் சென்ற மனைவி… மீட்டுத்தரக்கோரி கணவன் கண்ணீர்!

gym owner elope married girl

மதுரை மாவட்டம் பெருங்குடியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். அவை ஏர்போர்ட்டில் எக்ஸிகியூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். ராஜேஷ் கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்களுக்குப் பிறகும் குழந்தை இல்லாததால் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் கனிமொழிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது.

நீர்கட்டியை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஜிம் ஒன்றுக்கு சென்றுள்ளார் கனிமொழி. மதுரை வில்லாபுரத்தில் உள்ள ஒரு ஜிம்மை யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தி வந்தார். அந்த ஜிம்மிற்கு உடல் எடையை குறைப்பதற்காக அடிக்கடி சென்றுள்ளார் கனிமொழி. அப்பொழுது யோகேஷ் கண்ணா என்பவருக்கும் கனிமொழிக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கனிமொழியின் கணவர் ராஜேஷ் கனிமொழியை கண்டித்து உள்ளார். உடனே யோகேஷ் கண்ணா தனது நண்பர்களுடன் கனிமொழியை கூட்டி சென்று உள்ளார். அதிர்ச்சி அடைந்த கணவர் ராஜேஷ் யோகேஷ் கண்ணாவை தொடர்புகொண்டு தன் மனைவியை தன்னிடம் கொடுங்கள் என்று கெஞ்சி இருக்கிறார். அதற்கு யோகேஷ் கண்ணன் மனைவி உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்.

என்ன செய்வது என்று புரியாமல் குழம்பித் தவித்தார் ராஜேஷ் காவல் நிலையத்துக்கு சென்று நடந்ததைக் கூறியுள்ளார். தற்பொழுது டிஎஸ்பி வினோதினி அவர்கள் ஜிம் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி காமத்தில் கிடைக்கும் சுகம் சில நிமிடங்கள் தான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் உங்கள் பிள்ளைகள் தலையில்தான் விடியும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது.

Exit mobile version