லக்ஷ்மி மேனன் தமிழ் சினிமாவிற்கு சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து கும்கி பாண்டியநாடு ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழில் எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். லக்ஷ்மி மேனன் சினிமாவை விட்டு பலவருடங்களாக ஒதுங்கி இருந்தார். காதல் தோல்வியால் சினிமாவை விட்டு ஒதுங்கி நடிகை என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால் அவர் அறிவித்துள்ளார் எதனால் சினிமாவை விட்டு விலகினார் என்று .
தனது படிப்பை முடிப்பதற்காக சினிமாவிற்கு கொஞ்சம் பிரேக் கொடுத்தேன். தற்பொழுது படிப்பை முடித்து விட்டேன். இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சினிமாவில் நடிப்பேன். ஒரு சில படங்களிலும் கமிட்டாகி விட்டேன் விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியவர்.
தமிழில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதனை பலமுறை மறுப்பு தெரிவித்து விட்டேன். வேலையில்லாமல் இருப்பவர்கள் பொழுதுபோக்காக ஒரு ஷோவில் கலந்துகொண்டு பாத்திரங்களை கழுவதற்கும் டாய்லட் கழுவுவதற்கும் எனக்கு விருப்பமில்லை.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை போட்டு காட்டுவதும் சண்டை போடுவதும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதே நேரத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு நிகழ்ச்சிக்காக யார் முன்னதாகவும் வாழ்ந்து காட்ட எனக்கு அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.