பிரதாப் போத்தன் வயது 70 சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் காலமானார். தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள பிரதாப் போத்தன் மலையாள சினிமாவிலும் கொடி கட்டி பறந்தவர். இயக்குனர் மற்றும் நடிகரான பிரதாப் போத்தன் அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர். ராதிகா அவர்களின் முதல் கணவர் ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே பிரிந்து விட்டார்கள்.
சமீபத்தில் பிரதாப் போட்டியில் கமலினி நடுக்காவிரி என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். பிரதாப் போத்தன் இறந்த தினத்தன்று அவரின் உடலை பார்ப்பதற்காகவே கேரளாவில் இருந்து மலையாள நடிகர்கள் அசோசியேசன் மூலமாக பலர் வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தி சென்றார்கள்.
அப்போது பிரபல நடிகை கன்னிகாவும் வந்திருந்தார் செய்தியாளர்களிடம் கன்னிகா கூறியது அவர் நல்ல நடிகர் மலையாளத்தில் மூன்று படங்கள் என்னுடன் நடித்துள்ளார். அவருடைய முகத்தை பார்க்க PEACEFUL ஆக இருக்கிறது.
ஒரு நாள் அவர் என்னிடம் கூறியது மரணம் என்று ஒன்று வந்தால் அது தூக்கத்திலே வரணும் என்று அவர் கூறியிருந்தார் அவர் சொன்னபடியே அவருக்கு மரணம் தூக்கத்திலே வந்துள்ளது. ஐ மிஸ் யூ சார் என்று கூறியுள்ளார் நடிகை கன்னிகா.
வாகை சந்திரசேகர் அவர்கள் பிரதாப் போத்தன் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் அவர் சில மாதங்களுக்கு முன் பிரதாப் போத்தன் அவர்களை சந்தித்து பேசிய போது இருவரும் ஜாலியாக பேசிய உரையாடிய வீடியோவும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
நல்ல மனிதர் பலரிடம் நல்ல பெயரை சம்பாரித்து விட்டு இந்த உலகைவிட்டு சென்று உள்ளார்.