Home NEWS ஸ்ரீமதி எனது பேத்தி மாதிரி உருக்கமாக பேசிய MLA கணேசன்..!!! ஸ்ரீமதி விஷயத்தில் தமிழக முதல்வர்...

ஸ்ரீமதி எனது பேத்தி மாதிரி உருக்கமாக பேசிய MLA கணேசன்..!!! ஸ்ரீமதி விஷயத்தில் தமிழக முதல்வர் எவ்வளவு வேதனை அடைந்தார் என்பது எங்களுக்கு தெரியும்…!!!

minister cv ganesan in srimathi funeral

சின்னசேலம் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில் அவரது தாயாருக்கு ஆறுதல் கூறிய விதம் தவறாக வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியது.

சமீபத்தில் தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் அவர்கள் அளித்த விளக்கத்தில் அண்மையில் நடந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் மரணம் தமிழ்நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியது.

ஸ்ரீமதியின் தாயார் செல்வி எனது சொந்த கிராமமான கமுதூர் பஞ்சாயத்து சேர்ந்த அரியநாச்சியில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதிலிருந்து என்னை அவருக்கு தெரியும் எனக்கு அவருடைய குடும்பத்தினரையும் நன்கு தெரியும் அரியநாச்சி கிராமத்தில் இன்றும் கணேசா என்று தான் என்னை கூப்பிடுவார்கள். அரியநாச்சி கிராம மக்களை பொருத்தவரை நான் அமைச்சர் அல்ல சாதாரண கணேசன் தான்.

எனக்கும் அரியநாச்சி கிராம மக்களுக்குமான உறவு என்பது 60 ஆண்டுகால உறவு. ஸ்ரீமதி மரணம் அடைந்த செய்தி அறிந்ததும் ஆறுதல் கூறுவதற்காக சென்றபோது செல்வி தன்னுடைய மகளின் இழப்பு குறித்து என்னிடம் கூறி அழுதார். கொரோனாவில் என்னுடைய மகளையும் மனைவியையும் இழந்த துயரத்தை நான் அவரிடம் கூறினேன் என் மகளை போன்ற செல்வி இளம் வயது குழந்தைகளை இழப்பது பெற்றோருக்கு எவ்வளவு துயரமானது என்பதை கூறி ஆறுதல்படுத்த முயன்றேன் எனவே தான் செல்வியை ஒரு மகளாகவும் அவரது மகளை எனது சொந்த பேத்தியாகவும் பாவித்து மாணவியின் இறுதிச்சடங்கு வரை உடனிருந்து அனைத்து முடிந்த பிறகு தான் அங்கிருந்து வெளியேறினேன்.

அப்படி இருக்க உள்ளார்ந்த சோகத்துடன் நான் ஆறுதல் கூறியது தவறான முறையில் சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது பெரும் துயர சம்பவ நிகழ்வை கண்ணீரை கொச்சைப்படுத்தி காட்டுவது சமூக ஊடகங்களுக்கு அறம் அல்ல லைக் வியூஸ் பெறுவதற்காக எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நிலை இப்போது ஏற்பட்டு உள்ளது.

ஸ்ரீமதியின் மரணச் செய்தி அறிந்த தமிழகம் முதல்வர் எவ்வளவு வேதனை அடைந்தார். அரசு நிர்வாகத்தை எவ்வளவு வேகமாக முடுக்கி
விட்டார் என்பது எங்களுக்கு தான் தெரியும் ஸ்ரீமதியின் இறுதிச்சடங்கு நடந்த நாளில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எத்தனை முறை போன் போட்டு விசாரித்தார். சிறு தவறுகள் கூட நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஓயாமல் அறிவுறுத்தி கொண்டே இருந்தார்.

உண்மை நாட்டு மக்களுக்கு சொல்வது என் கடமை அதை கூறியுள்ளேன் என்று பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் திரு.கணேசன்.

Exit mobile version