Home NEWS பழனிக்கு வந்த கேரள பெண் பலாத்கார வழக்கில் முதல் கட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான தகவல்…!!!

பழனிக்கு வந்த கேரள பெண் பலாத்கார வழக்கில் முதல் கட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான தகவல்…!!!

Palani

கேரள பெண் பலாத்கார புகார் விவகாரம் தொடர்பாக பழனி பொலிசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் சேர்ந்த 45 வயது பெண் கடந்த மாதம் 19ம் தேதி கணவருடன் திண்டுக்கல் மாவட்டம் பழனி வந்துள்ளார். அடிவாரம் பூங்கா ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கி உள்ளார். இந்நிலையில் ஊர் திரும்பிய அப்பெண் பழனியில் தன்னை 3 பேர் கடத்தி சென்று லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்ததாகவும் இதுதொடர்பாக போலீஸ் புகார் தெரிவித்தபோது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் திண்டுக்கல் ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார் அடிவாரத்தில் உள்ள லாட்ஜில் விசாரணை தொடங்கினர். பழனி போலீஸ் தரப்பில் கூறுகையில் கடந்த மாதம் 19ம் தேதி பழனி வந்த தம்பதி லாட்ஜில் அறை எடுத்து தங்கி மது அருந்தி உள்ளனர். இருவரும் மது போதையில் சண்டை போட்டுள்ளனர். சத்தம் கேட்டு சென்ற லாட்ஜ் ஊழியர்கள் இருவரையும் விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.

F3FX49 Palani city and hill view in twilight Palni hill temple is situated at an elevation of 1500 feet above sea level ; Tamil Nadu

அதன்பின் அப்பெண் உடன் வந்த நபர் மதுபோதையில் பழனி நகரில் சுற்றித் இருந்துள்ளார். ஊரடங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். போதையில் உடன் வந்த பெண்ணை காணவில்லை செல்போனை காணவில்லை என மாற்றி மாற்றி பேசியுள்ளார். இதனால் போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பினார். காவல் நிலையத்திற்கு அந்தப் பெண் வரவில்லை என அன்றைய தினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிசிடிவி பதிவு மற்றும் செல்போன் அழைப்புகளை அடிப்படையாகக்கொண்டு முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.

Exit mobile version