விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் தோனி,மேரிகோம், சாய்னா நேவால், கபில்தேவ், மிதாலிராஜ் உட்பட சில விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து பல படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது வாழ்க்கை சம்பவங்கள் திரைப்படமாக உருவாக்கப்பட்ட குறிப்பாக தென்னிந்திய துறையில் உருவாக்கும் என்றால் அதில் தனது கேரக்டரில் சூர்யா நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது சூரியவினால் மட்டுமே திரையில் என் கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். பிறகு சிவா இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட அருவா என்ற படம் நிரந்தரமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது ஞானவேல் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் கௌரவ தோற்றம் ஆக வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் சூர்யா.