Home CINEMA NEWS டெல்லி ஏர்போர்ட் ஏன் இப்படி உள்ளது முதலில் அதை கவனியுங்கள் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி...

டெல்லி ஏர்போர்ட் ஏன் இப்படி உள்ளது முதலில் அதை கவனியுங்கள் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி ட்வீட்..!!!

rajamouli tweet about delhi airport

பாகுபலி தெலுங்கு சினிமாவில் இப்படி ஒரு இயக்குனர் இருக்கிறாரா என்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் தான் ராஜமௌலி. ராஜமவுலியின் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதையாக இருக்கும். ஒரே மாதிரி கதைகளை எடுக்கும் இயக்குனர்கள் ராஜமௌலி போன்ற இயக்குனர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் இயக்குனரான ராஜமவுலி அதனைத்தொடர்ந்து சில படங்களை இயக்கி வந்தார் குறிப்பாக 2009ஆம் ஆண்டு வெளியான மகதீரா இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அதனைத்தடர்ந்து ஒரு ஈயை வைத்து சுவாரசியமாக கதை சொல்ல முடியும் என்று தைரியமாக ஈகா என்ற படத்தை எடுத்திருந்தார் அதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாகுபலி படத்தை இயக்கியிருந்தார். இரண்டாம் பாகமும் வெளியிட்டு மாபெரும் வசூல் புரட்சியை செய்த இயக்குனர் தற்போது RRR என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Naan Ee Movie Wallpapers

இந்நிலையில் ராஜமௌலி அவர்கள் விமானத்தின் மூலம் நேற்று டெல்லி ஏர்போர்ட் சென்றிருக்கிறார் அங்கு டெல்லி விமான நிலையத்தின் நிலையை பார்த்து மிகவும் வருத்தப்பட்டு ட்வீட் போட்டு உள்ளார் அதில் டெல்லி விமான நிலையத்திற்கு லுஃப்தான்சா விமானம் அதிகாலை 1மணிக்கு வந்தது ஆர்டிபிசியல் சோதனைக்கு நிரப்ப படிவங்கள் வழங்கப்பட்டது அனைத்து பயணிகளும் படிகளில் உட்கார்ந்து எழுதினார் சிலர் சுவற்றில் முட்டு கொடுத்து எழுதினர்கள் மேஜை இல்லாமல் அது பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

மேஜை கொடுப்பது எளிய சேவை. ஏர்போர்ட்டை விட்டு வெளியேறும் பகுதியில் ஏகப்பட்ட தெரு நாய்கள் கண்டு ஆச்சரியப்பட்டேன். இது வெளிநாட்டில் இருந்து முதல் முதலாக இந்தியா வருபவர்களுக்கு நல்ல எண்ணத்தை கொடுக்காது தயவு செய்து கவனியுங்கள் நன்றி என்று கூறியுள்ளார்.

Exit mobile version