Home NEWS 2 பவுன் தங்கச்சங்கிலியை முதல்வரின் கொரோனா நிவாரண தொகைக்காக கொடுத்த பெண்ணுக்கு வீட்டிற்கே அப்பாய்ன்மெண்ட்...

2 பவுன் தங்கச்சங்கிலியை முதல்வரின் கொரோனா நிவாரண தொகைக்காக கொடுத்த பெண்ணுக்கு வீட்டிற்கே அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்..!!!

mk stalin give job appointment order to girl

தமிழக முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பொதுமக்கள் கொடுத்த மனுக்களை எடுத்து சென்றார். சென்னை வந்ததும் கொடுத்த மனுக்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வந்தார்.

அப்பொழுது கொரோனா நிவாரண தொகைக்காக தன்னிடம் பணம் இல்லை என் கழுத்தில் இருப்பது ரெண்டு பவுன் தங்க சங்கிலி அதை மக்களுக்காக கொடுக்கிறேன் என்று மனுவில் ஒரு பெண் குறிப்பிட்டு இருந்தார்.

ரெண்டு பவுன் தங்க சங்கிலியை வைத்திருந்த அந்தப் பெண் முதல்வருக்கு ஒரு சிறிய கோரிக்கை ஒன்றும் வைத்திருந்தார் அதில் நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளேன் என் குடும்பம் மிகவும் சிரமப்படுகிறது. எனக்கு அரசாங்கம் வேலை வேண்டும் என்று நான் நினைக்கவில்லை எனது ஊரில் அருகில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தால் கூட போதும் என் தாய் மீண்டும் உயிர் பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்து இருப்பேன் என்று உருக்கமாக கடிதம் எழுதி இருந்தார்.

இதை பார்த்து நெகிழ்ந்து போன முதல்வர் உடனே அந்தப் பெண்ணிற்கு வேலை வாய்ப்பு கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அந்தக் கடிதம் எழுதிய பெண் சௌமியா விற்கு தனியார் வேலை ஆணையை நேரில் கொண்டு சென்று கொடுத்துள்ளார்.

அவர் பகுதியிலேயே இருக்கும் ஜே எஸ் டபிள்யூ என்ற தனியார் நிறுவனத்தில் மாதம் 17,000 ரூபாய் சம்பளம் தற்பொழுது இவருக்கு கிடைக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தற்போது அவர் கூறியது போலவே வேலை வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் உதவ முன்வந்த எண்ணம் நெகிழ வைக்கிறது என்று முதல்வர் கூறியதோடு தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Exit mobile version