பார்த்திபன் நல்ல நடிகர் என்பதை தாண்டி சிறந்த இயக்குனர் என்று கூறலாம் இவருடைய பல படங்கள் வித்தியாசமான கதைக் களத்தில் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு இருக்கும்.
பார்த்திபனின் படங்கள் என்றாலே அந்த படங்களில் சமூக அக்கறை கொண்ட வசனங்களும் காட்சியமைப்பும் இருக்கும். குறிப்பாக இவர் இயக்கிய புதிய பாதை முதல் சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்த ஒத்த செருப்பு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்பொழுது பார்த்திபன் முதன்முதலாக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களுடன் கை கோர்க்கிறார். ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களுடன் கைகோர்க்கும் படத்திற்கு இரவின் நிழல் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட பார்த்திபன் இரவின் நிழல் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது.
முழு படத்தை முதன் முதலில் பார்த்ததே ஆஸ்கர் இது சிங்கிள் ஷாட் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளாராம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.