முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் கட்ட அலை படுவேகமாக பரவி வரும் நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் சிகிச்சைகள் முறையாக கொடுத்தும் காப்பாற்ற முடியாமல் இறக்கிறார்கள்.
இந்தக் கொடுமையான காலகட்டத்தில் செவிலியர்கள் மருத்துவர்கள் என அனைவரும் மக்களைப் பாதுகாப்பதற்காக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டு தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் இதனை ஊடங்கள் மூலமாக தெரிவித்து கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது கிடைத்த தகவலின்படி விஜயபாஸ்கர் அவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான மருந்துகளை எடுத்து வருகிறார்.
கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தி கொள்ளும் அவர் சிகிச்சை முடிந்து ஓய்வு பெற்று கொரோனா தொற்றில் இருந்து பூரண குணம் ஆன பின் வெளியில் வருவார் அதுவரை ஓய்வில் இருப்பார் என்று அதிமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.