Home NEWS மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் ஐ.எ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு..!!! பாதியிலே...

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் ஐ.எ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு..!!! பாதியிலே கட்சியை விட்டு விலகி செல்லும் கமலின் நம்பிக்கைக்குரியவர்கள்.

makkal needhi maiam santhosh babu

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பில் இருந்த அனைவரும் நாளுக்கு நாள் கட்சியை விட்டு விலகி கொண்டே போகிறார்கள்.

முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கமலஹாசன் மாறப்போவதில்லை அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி விலகினார். அதனைத் தொடர்ந்து கட்சியில் சில முக்கிய நபர்கள் அடுத்தடுத்த நாட்களில் கட்சியை விட்டு விலகி வந்தனர்.

இந்நிலையில் மதுரவாயில் தொகுதியில் வேட்பாளராக நின்று மக்கள் மனதில் இடம் பெற்ற பத்மப்ரியா சில மணி நேரங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு விலகுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக நின்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அவர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு ஐஏஎஸ் அவர்கள் கட்சியை விட்டு விலகியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Exit mobile version