Home NEWS பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் இறுதி சடங்கிற்கு பணம் தந்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை…!!! சோகத்தில் கிராம மக்கள்.

பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் இறுதி சடங்கிற்கு பணம் தந்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை…!!! சோகத்தில் கிராம மக்கள்.

OLD age

தங்கள் இறுதி சடங்கிற்கு உரிய பணத்தை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு வயதான தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கணவாய்பட்டி சேர்ந்தவர் தொத்தன் 65 வது மனைவி வீராயி 60 இவர்களுக்கு குழந்தை இல்லை.

இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாறை அருகே மஞ்சள்பரப்பு கிராமத்தில் வாடகை வீட்டில் குடியேறி கூலி வேலை செய்து வந்தனர். தொத்தன் காபி தோட்டத்தில் வேலை செய்தார். வீராயி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார். முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் கடந்த சில மாதங்களாக இரண்டு பேரும் அவதிப்பட்டு உள்ளனர். இதனால் மனமுடைந்த கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு அரளி விதைகளை அரைத்து குடித்தனர்.

வீராயி வாந்தி எடுத்துள்ளார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு சேர்ந்த அந்தோணி என்பவர் தொத்தன் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். இப்போது இரண்டு பேரும் அந்தோணியிடம் தாங்கள் அரளி விதையை அரைத்துக் குடித்து விட்டோம். எங்களை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். மேலும் நாங்கள் இறந்த பிறகு எங்களை ஒரே இடத்தில் புதைக்க வேண்டும். எங்களின் ஊரில் இறுதி சடங்கு செலவிற்காக ரூபாய் 40 ஆயிரத்தை அவர் கையில் கொடுத்து உள்ளார்.

சிறிது நேரத்தில் வீராயி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொத்தன் மீட்டு பெரும்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

பின்னர் இருவரது உடல்களும் சொந்த ஊரான கணவாய்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. தொத்தன் வீராயி தம்பதி தற்கொலை செய்வதற்கு முன்பு வத்தலகுண்டு சென்று வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 40 ஆயிரத்தை எடுத்து வந்துள்ளனர். தற்கொலை செய்ய முடிவெடுத்த இருவரும் யாருக்கும் சிரமம் கொடுக்க கூடாது என கருதி இறுதி சடங்கிற்கு அதை அளித்து விட்டு உயிரை மாய்த்து உள்ளனர்.

Exit mobile version