Home NEWS முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று ஸ்டாலின் சொன்ன உடனே ஆனந்த கண்ணீர் விட்ட...

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று ஸ்டாலின் சொன்ன உடனே ஆனந்த கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்..!!!

stalin taken oath tamilnadu cm

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது அந்த வாக்குப் பதிவு முடிவுகள் மே இரண்டாம் தேதி வெளியாகின.

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது மேலும் திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டி வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்க தகுதியை பெற்றது.

இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி இயக்க விழா எளிமையான முறையில் நடைபெற்றது முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார் மேலும் ஆளுநர் பன்வாரிலால் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பிறகு 34 அமைச்சர்களும் பதவி ஏற்றனர் இந்நிலையில் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்கும் பொழுது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என உரையைத் தொடங்கியதும் அங்கிருந்த மு க ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்து போனார். மேலும் முதல் முதலாக கணவர் முதலமைச்சர் ஆவதை எண்ணி ஆனந்தை கண்ணீர் வழியாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வராக முதல் முதலில் பொறுப்பேற்ற ஸ்டாலின் நேராக கோபாலபுரத்திற்கு சென்று அவரது தாயிடம் ஆசி பெற்றார். அதன் பின் தனது தந்தை கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். இனி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி எப்படி நாடாகும் என்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.

Exit mobile version