தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர். திமுகவா அதிமுகவா யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிதாக இருக்கிறது.
இந்நிலையில் திமுகவைப் பற்றி அதிமுக தலைவர்களும் அதிமுகவை பற்றி திமுக தலைவர்களும் மாற்றி மாற்றி குறைகளை கூறிக்கொண்டு ஒரு பக்கம் இருக்க தற்போது அந்த இந்த கட்சி தலைவர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
விவசாயிகளுடன் இணைந்து விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி ஆலோசிப்பதும், கிராமபுற ஊர்களுக்கு சென்று குறைகளைக் கேட்பதும், டீக்கடைகளில் இயல்பாக அமர்ந்துகொண்டு டீ குடித்து மக்களிடம் பேசி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் திமுக தரப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை ரத்து செய்வோம் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபோல அதிமுக தரப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நிறைய நல்லது செய்வோம் என்று கவர்ச்சிகரமான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
மற்ற கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். சசிகலா அவர்கள் சிறையை விட்டு வந்ததால் அதிமுக தரப்பில் பெரிய மாற்றம் வரும் என்று டிடிவி தினகரன் ஒரு பக்கம் கூறிவருகிறார். சசிகலாவும் இன்னும் சில நாட்களில் அரசியல் குறித்து பேசுவேன் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடிக்க தலைவர்கள் மக்களோடு மக்களாக குறைகள் கேட்டு வருகின்றனர். அந்தவகையில் மு க ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஒரு பெண் குழந்தை ஒருவர் செல்லமாக மு.க. ஸ்டாலின் அவர்களின் கன்னத்தை கிள்ளிய புகைப்படம் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனை பார்த்த திமுக ஆதரவாளர்கள் எங்கள் தலைவரை சின்ன குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று கூறி வருகின்றனர்.