Home NEWS முதன் முதலாக தனது அன்பு மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகளுக்கு நன்றி தெரிவித்த கிரிக்கெட் வீரர்...

முதன் முதலாக தனது அன்பு மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகளுக்கு நன்றி தெரிவித்த கிரிக்கெட் வீரர் நடராஜன்..!!! செம கியூட் புகைப்படம்..!!!

cricket player natarajan with his daughter

நடராஜன் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னம்பட்டி தான் இவருடைய சொந்த ஊர். சின்ன வயசிலிருந்து கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்ட நடராஜன் பெரிய கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருந்தாராம்.

வயலில் தனது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவாராம் அது போல காலேஜ்ல டிகிரி படிக்கும் போது தனக்கு நேரம் கிடைக்கும் போது கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடி பயிற்சி செய்து வந்தாராம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பல தடைகளையும் தோல்விகளையும் தாண்டி தற்பொழுது கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளராக விளையாடி அசதி கொண்டு இருக்கிறார் நடராஜன்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் புகழைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை அந்த அளவிற்கு தனது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி விட்டார் நடராஜன். இவருடைய பந்து வீசும் ஸ்டைலை பார்த்த மற்ற வீரர்கள் யாரடா இவர் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது. நடராஜன் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு திரும்பிய போது அவருக்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு பலரை வியக்க வைத்தது.

தன்னைப்போல கிரிக்கெட் மீது காதல் கொண்டவர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் கிடைக்கும் வகையில் நடராஜன் கிரிகெட் அகடமி என்று ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் என்றாவது கிரிக்கெட் வீரராக மாட்டோமா என்று ஏங்கி இருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியும் வருகிறார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு நடராஜன் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்பொழுது முதல் முதலாக தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடராஜன் தன் குழந்தையை வர்ணித்து சில வரிகளும் கூறியுள்ளார் அதில் எங்களுடைய ஏஞ்சல் ஹன்விகா, நீங்கள்தான் என் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு. என் வாழ்க்கை சந்தோசமாக செல்வதற்கு காரணம் நீதான். எங்களை பெற்றோராக நீ தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்று தனது நான்கு மாத குழந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version