சின்ன கலைவாணர் விவேக் ஒரு நடிகனாக மட்டும் தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்ளாமல் ஒரு சமூக ஆர்வலராக பல இடங்களில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து சென்று விட்டார்.
விவேக் தனது படங்களில் தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை தனது நகைச்சுவை மூலமாக கூறி பலரை சிரிக்க வைத்துவிட்டு இந்த உலகை விட்டு விடை பெற்று விட்டார். என்றும் சிரித்த முகம், கிண்டலான பேச்சி, இறங்கிய குணம் கொண்ட மனிதனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார் என்பதை இன்றும் மக்களால் ஏற்றுக் முடியாத ஒன்று.
விவேக் அவர்கள் பற்றி அவருடைய மேனேஜர் செல் முருகன் கூட சில வரிகள் பகிர்ந்துள்ளார். நடிகர் மணிவண்ணன் அவர்களுக்கு செல்போன் கொடுத்து வந்தாராம் முருகன் அப்போது மணிவண்ணன் அவர்கள் விவேக் அவர்களிடம் செல்போன் ஏதும் வாங்க வேண்டுமென்றால் முருகனிடம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சிபாரிசு செய்தாராம். விவேக் அவர்களும் உன்னை நம்பி வாங்கலாமா என்று செல் முருகனை பார்த்து நக்கலாக சிரித்து கொண்டே கேட்டாராம் அப்போது ஏற்பட்ட பழக்கம் செல் முருகன் பேசும் போதெல்லாம் விவேக் அதனை ரசித்துக் வந்தாராம் ஏதாவது காமெடியாக பஞ்ச் டயலாக் சொல்ல வேண்டுமென்றால் விவேக் செல் முருகன் அவர்களிடம் கேட்பாராம்.
சில வருடங்கள் கழித்து செல் முருகன் அவர்களை தனது மேனேஜராக ஆக்கிக்கொண்டார் விவேக் அதன் பின் அனைத்துப் பொறுப்புகளையும் அவரிடம் கொடுத்தாராம் விவேக். விவேக் அவர்கள் நடிக்கும் படங்களுக்கு அட்வான்ஸ் கூட செல் முருகன் அவர்களிடம் தான் இருக்குமாம் எந்த ஒரு கணக்கு வழக்குகளையும் செல் முருகனிடம் கடைசிவரை கேட்டதே இல்லையாம் இன்று அவரால் தான் நான் இருக்கிறேன் என்று உருக்கமாக முன்பு ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
இன்று விவேக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மேனேஜர் செல் முருகன் அவர்கள் உருக்கமான சில பதிவுகளை பதிவிட்டுள்ளார் அதில் ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார் விவேக் அன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் மாணவ மாணவிகள் ஹாப்பி பர்த்டே டூ யூ விவேக் சார் என்று பாடி விவேக் அவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தார்களாம். அந்த வீடியோ தற்பொழுது செல் முருகன் அவர்கள் பதிவிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் விவேக் அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் விவேக் சிரிப்பு இன்னும் கண் முன்னே நிற்கிறது.
இன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விவேக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நட்டு அதனை வீடியோவாக வெளியிட்ட செல் முருகன் நீங்கள் நட்டு 33 லட்சம் மரக்கன்றுகள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் என்று உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் செல் முருகன்.
சின்ன கலைவாணர் தற்பொழுது உயிரோடு இல்லாத இந்த தருணத்திலும் அவரை நினைத்து ரசிகர்கள் பல இடங்களில் அவரது பிறந்தநாளில் மரக்கன்று நட்டு வருகிறார்கள்.
ஒரு மனிதராக பிறந்து சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, விழிப்புணர்வு கொடுத்து உலகத்தை விட்டு விடை பெற்ற விவேக் சார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.