பிரபல நடிகை பாவனா சூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பாவனா பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனே மொத்த திரை உலகமே பெரும் அதிர்ச்சியில் இருந்தது.
எப்படி இது நடந்திருக்கும் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வர பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்ய சொன்னது பிரபல கேரளா நடிகர் திலீப் என்று உறுதியானது. அதன் பின் நடிகையின் முன்னாள் டிரைவர் ஆன சுனில் குமார் உட்பட ஏழு பேர் மற்றும் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தனர் அந்த கும்பல். இதனை அறிந்த போலீசார் செல்போனை கைப்பற்ற முயன்றார்கள் ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மெமரி கார்டு மட்டுமே போலீசாருக்கு கிடைத்தது.
இதற்கிடையே வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி போலீசார் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சில மாதங்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது அந்த விசாரணைக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இன்றைக்குள் விசாரணை அருகே தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பிரபல நடிகையின் பலாத்காரக் காட்சிகள் தீலிப்பிடம் இருப்பதாக கூறப்படுகிறது. உண்மை எது என்பதை கண்டுபிடிக்க நீதிமன்றத்தில் உள்ள மெமரி கார்டை மீண்டும் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதுபோல பாதிக்கப்பட்ட நடிகை பாவனாவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு மெமரி கார்டை மீண்டும் பரிசோதனை செய்ய தேவையில்லை என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து போலீஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது கடந்த வாரம் இதை பரிசீலித்த உயர் நீதிமன்றம் மெமரி கார்டை மீண்டும் தடவியல் பரிசோதனைக்கு அனுப்பவும் அது தொடர்பான அறிக்கையை ஏழு நாட்கள் தாக்கல் செய்யவும் என்று உத்தரவிட்டது.
அதன்படி மெமரி கார்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அங்கு நடந்த பரிசோதனை அறிக்கையில் நீதிமன்றத்தில் தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நடிகை பாவனாவின் பலாத்கார காட்சிகள் டார்க் வெப் என்ற ஆபாச இணையதளத்தில் வெளியாகி உள்ளதாக போலீசுக்கு தற்பொழுது சந்தேகம் எழுந்து உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை தீவிரப் படுத்தி உள்ளனர் பலாத்கார காட்சிகள் வெளியானது உறுதி செய்யபட்டுள்ளதை அடுத்து தொடர்ந்து விசாரணைக்கு மேலும் மூன்று வாரம் கால அவகாசம் கேட்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.
நடிகை பாவனா பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த போதும் அவை வெளியானதாக கூறப்படுவது இவ்வழக்கில் பெரும் சர்ச்சையை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியர்களை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளது.