விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெனிபர். இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகினார்.
தான் கர்ப்பமாக இருப்பதால் தொடர்ந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது என கூறினார். பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின் அந்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேடி நடித்து வருகிறார்.
நடிகை ஜெனிபர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதோடு சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன.
மேலும் அண்மையில் நடிகை ஜெனிபர் வீட்டில் மிகவும் எளிமையாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கணவருடன் குத்தாட்டம் போட்டு இருந்தார். மேலும் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகை ஜெனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதாக மகன் பிறந்து இருக்கிறார். இந்த சந்தோஷமான செய்தியை ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.