Home CINEMA NEWS கடைசியாக மனைவியின் முகத்தை பார்ப்பதற்காக கவச உடை அணிந்து வந்த அருண்ராஜா காமராஜ்.!!! கண்கலங்க...

கடைசியாக மனைவியின் முகத்தை பார்ப்பதற்காக கவச உடை அணிந்து வந்த அருண்ராஜா காமராஜ்.!!! கண்கலங்க வைத்த சம்பவம்.

arunrajakamaraja in wife funeral

அருண்ராஜா காமராஜ் பாடல் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்.

தன்னுடைய நண்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த சிவகார்த்திகேயன் கனா என்ற படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுத்தார். கனா படத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்க அருண் ராஜா காமராஜ் அவர்கள் தான் இயக்கினார் அந்த படம் மாபெரும் வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

ஏற்கனவே அருண் ராஜா காமராஜ் பாடிய நெருப்புடா பாடல் மற்றும் வரலாம் வரலாம் வா பைரவா போன்ற பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் இவருக்கு தொடர்ந்து பாடும் வாய்ப்பும் கிடைத்தது. தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ஆர்டிக்கிள் 15 என்ற படத்தை அருண் ராஜா காமராஜ் அவர்கள் இயக்கி வருகிறார்.

ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அருண் ராஜா காமராஜ் அவர்களுக்கும் அவரது மனைவி சிந்துஜா இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

தன்னுடைய மனைவியின் முகத்தை பார்த்தே ஆகவண்டும் என்று கதறி அழுத அருண்ராஜா காமராஜ் பிபிஇ கிட்டுடன் வந்திருந்தார் அப்பொழுது அவரது மனைவி சிந்துஜாவின் உடலை பார்த்து தேம்பி அழ ஆரம்பித்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் எதிரிக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது அருண்ராஜா காமராஜ் அவர்களுக்கு தைரியம் சொல்லுங்கள் என்று சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதியிடம் ட்விட்டர் வழியாக தெரிவித்து வருகின்றனர்.

மனைவியை இழந்து தவிக்கும் அருண் ராஜாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது அதனை பார்த்த ரசிகர்கள் கண் கலங்கி வருகிறார்கள்.

Exit mobile version