Home CINEMA NEWS போலீசாகிறார் ராஜாராணி ஆலியா மானசா..!!! புகைப்படம் உள்ளே.

போலீசாகிறார் ராஜாராணி ஆலியா மானசா..!!! புகைப்படம் உள்ளே.

alyamnanasa in police getup

ஆலியா மானசா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஆலியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் ராஜா ராணி தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததால் சீரியல் பிரியர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றார்.

மானஸ் என்பவரை காதலித்து வந்த ஆலியா மானசா ஒரு சில கருத்து வேறுபாடால் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது காதலனை விட்டு பிரிந்தார். அதன்பின் ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரே சீரியலில் ஓஹோனு பிரபலமடைந்த ராஜா ராணி ஜோடிக்கு நிறைய விளம்பரத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. நகைக்கடை விளம்பரத்தில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட் விளம்பரம் வரை ஆலியாவின் முகத்தை வைத்து பிரமோட் செய்யும் அளவிற்கு இருவரும் வளர்ந்தனர்.

சமீபத்தில் ஆலியாவிற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது அந்தப் பெண் குழந்தையை கொஞ்சி விளையாடி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். தற்பொழுது மீண்டும் ராஜா ராணியில் சீசன் 2வில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் ஆலியா. தற்பொழுது போலீஸ் டிரஸ் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் . சிங்கம் சூர்யாவை மிஞ்சிட்டீங்கனு ரசிகர்கள் ஆலியாவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

விரைவில் போலீஸ் கெட்டப்பில் ஆலியாவை பார்க்கலாம்.

Exit mobile version