Home CINEMA NEWS பிரசவம் முடிந்த பின் முதல் முறையாக கண் கலங்கி தன் குழந்தைக்கு அன்பு முத்தம் கொடுத்த...

பிரசவம் முடிந்த பின் முதல் முறையாக கண் கலங்கி தன் குழந்தைக்கு அன்பு முத்தம் கொடுத்த ஆலியா மானசா..!!! வெளியான கியூட் வீடியோ.

alya manasa daughter first birth video

ஆலியா மானசா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆலியா மானசாவிற்கு தற்போது ஐலா என்ற அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

தனது அன்பு மகள் ஐலாவின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார் ஆலியா மற்றும் சஞ்சீவ்.

ஆலியாவை போலவே செம க்யூட்டாக இருக்கும் ஐலா பாப்பா பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர்.

தற்பொழுது ஆலியா தான் முதல் முதலாக தாயான தருணத்தை அதாவது ஐலா பிறந்த தருணத்தை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குழந்தை பிறந்தவுடன் சஞ்சீவ்விடம் முதன்முதலில் கொடுக்கிறார்கள் அதன்பின் அவர் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு காட்டுகிறார்.

பின்பு சஞ்சீவ் குழந்தையை ஆலியாவிடம் காட்ட முதன் முதலில் தன் குழந்தையை பார்த்து கண்கலங்கி முத்தமிட்ட அந்த க்யூட் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Exit mobile version