Home NEWS அதிமுக கவுன்சிலர்கள் பயங்கர மோதல் சேர்கைளை கொண்டு தாக்கியதில் ஒருவர் படுகாயம்…!!!

அதிமுக கவுன்சிலர்கள் பயங்கர மோதல் சேர்கைளை கொண்டு தாக்கியதில் ஒருவர் படுகாயம்…!!!

ADMK

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் அதிமுக ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் 13வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரன், அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கைகளை ஏன் மதிப்பதில்லை.

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஒன்றிய தலைவரும் மற்ற சிலர் மட்டும் பேசிக்கொண்டு பணிகளை செயல்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? எங்களுக்கு தெரியாமல் பணிகள் நடத்துவது ஏன் என கேள்வி கேட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12வது வார்டு கவுன்சிலர் மனோகரன் அதிமுக மகேஸ்வரனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு சேர்களை தூக்கி எறிந்தனர். இதனால் உறுப்பினர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். தொடர்ந்து முறைகேடு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என கூறி கவுன்சிலர் மகேஸ்வரன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Exit mobile version