நடிகை ஷகிலா பல மொழி படங்களில் நடித்து பலதரப்பு ரசிகர்களை கையில் வைத்திருப்பவர். ஷகிலாவின் படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்கள் தங்கள் படத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்ய யோசிப்பார்களாம்.
ஷகிலாவின் படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததாம். இதுவரை நடிகையாக தனது வாழ்க்கையை நகர்த்தி வந்த ஷகிலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கொக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சி ஷகிலாவை இன்னும் பிரபலப்படுத்தியது.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஷகிலாவிற்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பெண்களுக்கு நிறைய மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் இதுதான் என் நோக்கம் இதனால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஷகிலா இதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஒரு தனி அடையாளம் வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவும் தயார் என்று கூறி உள்ளார்.
ஷகிலாவின் இந்த முடிவிற்கு ஒரு சிலர் ஆதரவு கொடுத்தாலும் ஒரு சிலர் நாட்டில் எவ்வளவோ சமூகப் போராளிகள் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பல வேலைகளை செய்து வருகிறார்கள் அவர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து இருக்கலாமே என்று கேள்வியும் முன்வைத்து வருகின்றனர்.