நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜக கட்சியில் இணைந்து பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பூ கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக இந்த தொகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி பெண்களின் வெற்றி பெண்களின் பயத்தைப் போக்க நான் சட்டமன்றம் செல்ல நினைக்கிறேன் என்று கூறிய குஷ்பு.
ஸ்டாலின் ஆட்களை அனுப்பி எனது வீட்டின் மீது கல்வீச்சு நடத்தினார். சேலையை இழுத்து அசிங்க படுத்தினார் என்று கூறிய குஷ்பு ஜெயலலிதா அவர்கள் சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன் என்று கூறினார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் பற்றி தவறாக பேசி வருகிறார்கள். முதல்வரின் தாயார் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது இது எவ்வளவு தவறான செயல் நன்று பேசிய குஷ்பு வாஷிங் மெஷின் கொடுத்தால் பெண்கள் குண்டாகி விடுவார்கள் என்று பேசுகிறார்கள் நீங்கள் பெண்கள் செய்யும் வேலையை ஒரு நாள் செய்து பாருங்கள் என்று சவால் விட்டார்.
என்னுடைய வெற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வெற்றி என்று கூறிய குஷ்பு ஜெயலலிதா பாணியில் செய்வீர்களா செய்வீர்களா என்று கூட்டத்தில் பேசினார்.
இந்தப் பேச்சைக் கேட்ட மக்கள் குஷ்பூ தன்னை ஜெயலலிதா போல சித்தரித்துக் கொள்வது செயற்கையாக உள்ளது என்று கருத்தை முன்வைத்து வந்தனர். ஏற்கனவே தாமரை மலரும் என்ற குஷ்பு வீடியோ இணையத்தில் வைரலாகி பல தரப்பினரால் கிண்டல் செய்யப் பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே.