கவிஞர் வைரமுத்து இவருடைய வரிகளால் இன்றும் பாடல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது தமிழ் சினிமாவில். இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி அவர்கள் வைரமுத்து அவர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பல வருடங்களாக கூறிவருகிறார்.
2005 – 2006ம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தை கூறியிருந்தார் அதில் இலங்கை தமிழர்களுக்காக வீழமாட்டோம் என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகம் பாடி இருந்ததாகவும் அது தொடர்பான வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் நடந்ததாகவும் அந்த விழாவில் தாங்களும் கலந்து கொண்டு பாடியதாகவும் கூறிய சின்மயி விழா முடிந்ததும் எல்லோரும் வீடு திரும்பிய நிலையில் தன்னையும் தன் தாயையும் புறப்பட வேண்டாம் எனக் கூறி அந்த விழாவை ஒருங்கிணைத்து ஒருவர் கூறினார்.
வைரமுத்து அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல் பெயரை சொல்லி அறைக்கு சென்று அவரை சந்திக்கும் மாறும் கூறினார். எதற்கு என்று கேட்டதற்கு அவருடன் ஒத்துழைக்கும் படியும் இல்லாவிட்டால் இந்த தொழிலிலேயே இருக்க முடியாது என்று மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
தனுஷின் மரியான் படத்தில் நடித்த நடிகை பார்வதி தற்பொழுது பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். ஓ.என்.வி சார் நம்முடைய பெருமை கவிஞராகவும் பாடல் ஆசிரியராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பு ஒப்பிட முடியாது. உழைப்பின் மூலம் நம் இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளன பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கி மரியாதை அளிப்பது மிகவும் அவமரியாதைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவால் 17 பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளோம் என்று கூறி வரும் இந்நிலையில் வைரமுத்துவிற்கு ஓ என் வி விருது எதற்கு என்று நடிகை பார்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.