Home CINEMA NEWS நியூ இயர் நிகழ்ச்சியில் மேடையிலே கதறி அழத்தொடங்கிய யாஷிகா ஆனந்த்..!!! கண்கலங்கிய சக நடிகைகள்.

நியூ இயர் நிகழ்ச்சியில் மேடையிலே கதறி அழத்தொடங்கிய யாஷிகா ஆனந்த்..!!! கண்கலங்கிய சக நடிகைகள்.

yashika anand cried in new year show

யாஷிகா கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்றுத் தரும் டீச்சராக நடித்திருப்பார் அதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்த யாஷிகாவிற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது கிளாமர் காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் என்று இளசுகளை கவரும் படி அந்த படம் இருந்தது.

இது போன்ற படங்கள் தேவையா என்று அனைவரும் கேட்டு வந்த நேரத்தில் அந்த படத்திற்கு கிடைத்த ஓப்பனிங் பார்த்து இன்று நிறைய படங்கள் அதுபோல எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.

யாஷிகா அந்த படத்தின் மூலம் பெரிய பிரபலத்தை அடைந்தார் அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கண்டு மேலும் பிரபலமடைந்த யாஷிகா கடை திறப்பு விழா படப்பிடிப்பு என்று செம பிஸியாக இருந்தார் சமீபத்தில் SJ சூர்யா அவர்களுக்கு ஜோடியாக கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சூட்டிங் இல்லாத நேரத்தில் தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் ECR சாலையில் ஜாலியாக பொழுதை கழித்து வந்த யாஷிகா. படுவேகமாக ஈசிஆரில் காரை ஓட்டி கார் தடுப்புச் சுவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே தனது தோழி பவானி என்பவரை இழந்தார்.

யாஷிகாவிற்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை முன்னேறி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வந்த யாஷிகா விபத்து நடந்த அன்று தன்னைக் காப்பாற்றிய மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

சமீபத்தில் பிரபல டிவி ஒன்றில் நியூ இயர் தினத்தில் வெளியாக இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யாஷிகா தன்னால் நடந்த விபத்தால் தனது நெருங்கிய தோழி பவானி என்பவர் பரிதாபமாக இறந்துவிட்டால் என்று நிகழ்ச்சியிலே அழுக தொடங்கினர்.

தனது தோழி பவானி பற்றி கூறிய யாஷிகா தன்னுடைய அறுவை சிகிச்சைகள் மற்றும் அந்த விபத்தினால் பட்ட கஷ்டங்களையும் எடுத்துக்கூறி உள்ளார். ஒவ்வொரு நாளும் குற்றஉணர்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் என் தோழி பவானியை கொன்றுவிட்டேன் என்ற குற்றவுணர்ச்சி எனக்குள் இருக்கிறது என்று கதறி மேடையிலே அழத்தொடங்கினர்.

இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வருகிறேன். எனக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் பெரும்பாலானோர் என்னை களைத்து வருகிறார்கள் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தேம்பி தேம்பி அழுது உள்ளார் யாஷிகா.

Exit mobile version