Home NEWS நடிகர் சூரி அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் திருடிய நபர் இவர் தானா…!!! போலீஸ் விசாரணையில்...

நடிகர் சூரி அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் திருடிய நபர் இவர் தானா…!!! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்.

Soori

நடிகர் சூரியின் சகோதரர் இல்ல திருமண விழாவில் 10 பவுன் நகை திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரை ராஜாகூரை சேர்ந்தவர் நடிகர் சூரி. அவரது சகோதரர் இல்ல திருமண விழா செப்டம்பர் 9 ஆம் தேதி சிந்தாமணியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது. அதில் முக்கிய பிரமுகர்களான சினிமா பிரபலங்கள் உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மணமகள் அறையில் 10 பவுன் நகை மாயமானது. இதுகுறித்து நடிகர் சூரி சகோதரரின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேசன் வழக்கு பதிவு செய்தார். தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருமண விழா நிகழ்ச்சியை பதிவு செய்த வீடியோக்கள், ட்ரோன் கேமராக்கள் மற்றும் மண்டபத்தின் சிசிடிவி ஆய்வு செய்தனர். அப்போது திருமண மண்டபத்தில் சந்தேகத்திற்குரிய நபரை ட்ரோன் கேமரா மூலம் உள்ள வீடியோ காட்சியில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வீடியோ காட்சியில் இடம் பெற்ற நபர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவர் 10 பவுன் நகையை திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து பரமக்குடிக்கு சென்ற தனிப்படை போலீசார் விசாரித்தனர். மேலும் விசாரணையில் திருமண மண்டபத்தில் நகையை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து 10 பவுன் நகைகளை கீரைத்துறை போலீசார் மீட்டனர். ஏற்கனவே விக்னேஷ் மீது வழக்குப்பதிவு இருந்தது தெரியவந்தது.

அவர் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற அரசியல், சினிமா, தொழிலதிபர்கள், அதிகாரிகள் ஆகிய முக்கிய பிரமுகர் இல்லத் திருமணங்களுக்கு சென்று உறவினர் போன்று டிப்டாப் உடை அணிந்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தெரியவந்தது. அதோடு விக்னேஷ் நேற்று கைது செய்யப்பட்ட அவர் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விக்னேஷ் தந்தை பரமக்குடியில் நகை கடை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version