90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அப்போது இளைஞர்களின் கனவுக் கன்னியாக தமிழக ரசிகர்கள் மனதில் கொடி கட்டி பறந்தவர். மேலும் வெள்ளி திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் உச்சத்தில் இருந்தவர்.
நடிகை குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தரி.சி யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அதோடு கடந்த 22 ஆண்டுகளாக இருவரும் நட்சத்திர ஜோடிகளாக இருந்ததோடு இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்து வருகின்றனர்.
நடிகை குஷ்பூ அரசியலில் முழு ஈடுபாடோடு செயல்பட்டு வருகிறார். மேலும் நடிகை குஷ்பு திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளிலிருந்து விலகி தற்போது பாஜக கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் நடிகை குஷ்புவுக்கு பாஜகவில் மிக முக்கிய பொறுப்பை கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை குஷ்பு கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பு அண்மையில் அரசியல் பணிக்காக டெல்லி பயணம் செய்துள்ளார்.
அதை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.