Home CINEMA NEWS சித்ராவின் ஆவியிடம் பேசிய பிரபல PARANORMAL EXPERT சார்லி..!!! அவங்க கொன்னுட்டாங்கனு அழுத சித்ரா..!!! என்ன...

சித்ராவின் ஆவியிடம் பேசிய பிரபல PARANORMAL EXPERT சார்லி..!!! அவங்க கொன்னுட்டாங்கனு அழுத சித்ரா..!!! என்ன நடந்து?

vj chitra dead paranormal expert charlie

விஜே சித்ரா இவர் இறந்து ஒரு மாதங்கள் முடிவடைய போகப்போகிறது ஆனால் இன்றும் இவரைப் பற்றி பேச்சுக்கள் பத்திரிகை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களிடம் ஓயவில்லை. தைரியமான துணிவான பெண் சித்ரா மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் சித்ரா எப்படி இந்த முடிவை எடுத்திருக்க முடியும் என்று அவரது நெருங்கிய தோழிகளே இன்றும் சந்தேகத்துடன் உள்ளனர்.

போலீசார் விசாரணையில் இது தற்கொலை என்று அறிவிக்கப்பட்டு அதன் பின் ஏன் சித்ராவின் கணவர் ஹேமந்தை கைது செய்ய வேண்டும் என்ற மர்ம முடிச்சிகளுக்கு இன்று வரை சரியான பதில் இல்லை. சித்ராவின் பெற்றோர் ஹேமந்த் தான் தன் பெண்ணை கொன்றதாக ஒரு பக்கம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். ஹேமந்த் தந்தை சித்ராவிற்கு கடன் இருந்தது அதனால்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று மற்றொரு பக்கம் பேட்டி கொடுத்து வருகிறார்.

இதற்கிடையில் Paranormal Expert Charlie அதாவது ஆவிகளுடன் பேசும் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். அவரது பெயர் சார்லி இதற்கு முன் பல ஆவிகளுடன் பேசி அதனை வெளியிட்டும் உள்ளார். பிரபல நடிகர் சுஷாந்த் ஆவியிடம் பேசி அதனை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சித்ரா ஆவியுடன் பேசுங்கள் என்று கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தார்களாம் அவரது ரசிகர்கள் அதனால் சார்லி சித்ராவின் ஆவியிடம் பேசினாராம். ஒரு பெட்டி ஒன்றை வைத்துக்கொண்டு frequency அட்ஜஸ்ட் செய்தாராம்.

சித்ரா வந்துட்டீங்களா என்று சார்லி கேடிக்கிறார் அதற்கு சித்ரா IAM DEAD இறந்துவிட்டதாக கூறி உள்ளார் சித்ரா.

நீங்க தற்கொலை பணிகிட்டீங்களா இல்லை உங்களை யாரும் கொலை செய்து விட்டார்களா என்று கேட்டதற்கு மறுபடியும் FREQUENCY சிக்னல் கட் ஆகி அதன் பின் என்னால எதுவும் சொல்ல முடியாது, எனக்கு அன்பு தேவைப்படுது. அவங்க ரொம்ப பயங்கரமான ஆளுங்க என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சார்லி உங்க ஃபேன்ஸ்க்கு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு இட்ஸ் ஆல் ஓவர் என்று கூறிவிட்டு END என்று கூறியதுடன் அமைதியாக இருந்தாராம் அதன்பின் நான் தனிமையாக உணர்கிறேன் அவங்க எல்லாம் வந்தாங்க என்று கூறியிருக்கிறார்.

சித்ரா உங்களை கொலை பண்ணிட்டாங்களா என்று சார்லி கேட்க அதற்கு சித்ராவின் ஆவி சில பேர் வந்தாங்க கொன்னுட்டாங்க அப்ப எனக்கு ரொம்ப மயக்கமா இருந்துச்சு என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதன்பின் சரியான பதில் ஏதும் கூறாத சித்ராவிடம் உங்கள் கணவர் ஹேமந்த் உங்களை கொலை செய்தாரா என்று கேட்டதற்கு இதற்கு அவர் ஜெயிலுக்கு போய் விட்டார் என்று சொன்னாரா அல்லது அவரும் வந்தார் என்று கூறி உள்ளார் என்று புரியவில்லையாம்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ யாராவது சித்ராவை கொலை செய்து இருப்பார்களோ என்று வருத்தப்பட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் இதெல்லாம் இந்த காலத்துல நம்பலாமா சயன்ஸ் வேர்ல்டுல இதை எப்படி நம்புவது என்றும் கூறி வருகிறார்கள் ஆவிகளிடம் பேசும் சார்லியிடம் தயவுசெய்து சித்ராவிடம் மறுபடியும் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Exit mobile version