Home NEWS கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க என்னுடைய கல்லூரியை தாராளமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் தமிழக அரசுக்கு விஜயகாந்த்...

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க என்னுடைய கல்லூரியை தாராளமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் தமிழக அரசுக்கு விஜயகாந்த் அறிவிப்பு.

Vijayakanth gave college For corona treatment to TN Government

விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி மக்கள் எதிர்பார்த்த அரசியல் கட்சி தலைவர். விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நலம் மட்டும் நன்றாக இருந்திருந்தால் இந்நேரம் தேமுதிக கட்சியினை ஒரு பெரிய பலம் உள்ள கட்சியாக கொண்டு சென்றிருப்பார்.

உடல்நலம் சரி இல்லாத இந்த நிலையிலும் தனது கட்சியை ஜெயிக்க வைக்க வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்ட விஜயகாந்த் தனது உடல்நிலை கூட பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து மக்களிடம் சில வார்த்தைகள் பேசினார்.

தமிழக மக்கள் மீது பிரியம் கொண்ட விஜயகாந்த் போன வருடம் கொரோனா முதல் அலையின் போது தனது பொறியியல் கல்லூரியான ஆண்டாள் அழகர் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொடுத்திருந்தார்.

தற்பொழுது உள்ள சூழலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடவசதி இல்லாத சூழ்நிலையை புரிந்து கொண்ட விஜயகாந்த் கொரோனாவின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்னுடைய இடத்தை தருகிறேன். என்னுடைய கல்லூரியான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடம் வசதி ஏற்படுத்தி தருகிறேன். கல்லூரியை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசியலும் கூறியுள்ளார் விஜயகாந்த்.

Exit mobile version