Home NEWS தனது அன்பு தந்தைக்கு இரவும் பகலும் ஓயாமல் வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் இரண்டாவது...

தனது அன்பு தந்தைக்கு இரவும் பகலும் ஓயாமல் வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் இரண்டாவது மகள்..!!! ஒரு அரசியல்வாதியா ஜெய்கிறத விட ஒரு அப்பாவா ஜெய்ச்சிட்டிங்க சார்.

vijayabaskar with daughter election campiagn

தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் போட்டியிடுகிறார். இரண்டாவது மகளான அனன்யா மைக் பிடித்து தன் தந்தையின் பணியை பற்றி மக்களுக்கு கூறி வாக்கு சேகரித்த அழகே தனி.

இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் விஜயபாஸ்கர் அவருடன் நடிகை விந்தியா மற்றும் விஜய பாஸ்கர் அவர்களின் இரண்டாவது மகள் உடன் இருந்தனர்.

விஜயபாஸ்கர் அவர்களின் இளைய மகள் அனன்யா கையில் மைக்கை எடுத்துக்கொண்டு நான் விஜயபாஸ்கர் அவர்களின் இரண்டாவது மகள் எல்லோருக்கும் வணக்கம் எங்க அப்பா தினமும் இரவும் பகலும் உங்களுக்கு அதான் உழைக்கிறாங்க ஏதாச்சும் உங்களுக்கு ஆயிருச்சுன்னா துடிச்சு போயிடுவாங்க.

காது கேக்கலான காது மிஷினா வருவாரு, கண்ணு தெரியல்னா கண்ணாடியா வருவாரு. கஜா புயல்னா கரண்டா வருவாரு, கொரோனான மருந்தா வருவாரு. பொங்கல் சீரா சிறப்பா வருவாரு.
தீபாவளின்னா சுஜித்தை காப்பாற்ற முயற்சி செஞ்சாங்க நானும் என் அப்பாகிட்ட சுஜித்தை காப்பாத்தாம வீட்டுக்கு வராதீங்க என்று கூறினேன் என்று பேசிய சிறுமி எங்க அப்பான்னு நான் சொல்றதை விட உங்க வீட்டு பிள்ளை என்று தான் சொல்லணும்.

உங்க வீட்டுப் பிள்ளைக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போடுவீர்களா என்று அழகாக தன் அன்புத் தந்தைக்கு வாக்கு சேகரித்தார்.

Exit mobile version