தமிழ் சினிமாவில் மீண்டும் ஐட்டம் பாடல் உருவெடுத்துக்க ஆரம்பித்துவிட்டது காரணம் சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு தெலுங்கு படத்தில் இடம் பெற்ற பாடலை அனைத்து மொழியினருக்கும் கொண்டாடி வந்தார்கள். துள்ளலான இசையை அந்த பாடலுக்கு அமைத்து இருந்தார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.
அந்தப் பாடலில் சமந்தாவின் நடன அசைவுகள் பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது. முதலில் அந்த பாடலில் ஆட தயங்கிய சமந்தாவை நம்பிக்கை கொடுத்து ஆட சொல்லியது அல்லு அர்ஜுன் தானாம். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் தற்பொழுது ஹிட் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சினிமாவைப் பொறுத்தவரை யாராவது ஒருவர் ஒரு விஷயத்தை செய்து வெற்றி பெற்று விட்டால் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் செய்து வருவார்கள் அது போல சமந்தா ஒரு ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் ரெஜினா ஆச்சாரியா என்ற படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆடியிருந்தார்.
ரெஜினாவும் சமந்தாவும் ஒருவருக்கொருவர் கவர்ச்சியில் பஞ்சம் வைக்காமல் பாடல் காட்சிகளில் தாராளம் காட்டி இருந்தனர் அதனைத் தொடர்ந்து தமிழில் காத்து என்ற படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் பிரபல நடிகை வனிதா.
காத்து என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் வனிதா ஐட்டம் டான்ஸ் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பதிவிட்டு என்னுடைய முதல் ஐட்டம் டான்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார் கலர் கோழி குஞ்சு என்று தொடங்கும் அந்த பாடலை கானா பாலா அவர்கள் பாடியுள்ளார்.
சமந்தா ரெஜினாவை தொடர்ந்து வனிதாவும் ஒரு பட பாடலுக்கு ஆட களம் இறங்கிவிட்டார் வனிதா. தியேட்டர் ரெண்டா போகப்போகுது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.