கன்னட திரையுலகில் முடிசூடா மன்னனாக வாழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களால் கன்னட கண்மணி என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட ராஜ்குமார் – பர்வதம்மா ராஜ்குமார். தம்பதியின் மூன்றாவது மகனாக கடந்த 2005 மார்ச் 17ஆம் தேதி பிறந்தவர் புனித் ராஜ்குமார். அவருக்கு ஐந்து வயது இருக்கும்போதே தந்த ராஜ்குமாருடன் குழந்தை நட்சத்திரமாக கனட வெள்ளித்திரையில் கால் பதித்தார்.
அப்போதே சொந்தக் குரலில் பேசி நடித்தது மட்டுமின்றி நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு அப்பு என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞரான வெள்ளித்திரையில் கால்பதித்தார். கடந்த 2002 முதல் 2025 வரை 29 படங்களில் நடித்துள்ளார். மாநிலத்தில் புகழ்பெற்ற பெரிய இயக்குனர்கள் இயக்கிய படங்களில் நடித்துள்ளார்.
அவரது நடிப்பில் வெளியான 10ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 100 நாட்கள் கடந்தும் திரையிடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதுவராக மட்டுமல்லாமல் மாநில அரசின் பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் விளம்பரங்களிலும் தூதுவராக நடித்துள்ளனர். அவருக்கு சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், சகோதரி பூர்ணிமா ஆகியோர் உடன் பிறந்தவர்கள்.
கடந்த 1999 டிசம்பர் 1-ஆம் தேதி சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திரீத்தி மற்றும் வந்திதா ஆகிய இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கன்னட திரையுலகில் இளம் நடிகராக இருந்து சாதனை படைத்த குறித்து ராஜ்குமார் தனது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான ரசிகர்களை விட்டு மறைத்துள்ளார்.
மறைந்த நடிகர் ராஜ்குமாரின் சொந்த ஊர் சாம்ராஜ்நகர் மாவட்டம் அனூர் தாலுக்கா தாளவாடி அடுத்து தொட்ட காஜனூர் கிராமமாகும் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று தந்தை பிறந்த வீட்டில் இரு நாட்கள் தங்கி கிராமத்தினரிடம் அன்பாக பழகி வந்தார் நேற்று மாலை தொட்ட காஜனூர் கிராமத்திற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை வரை தங்கியிருக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் அவரின் கடைசி ஆசை நிறைவேறவில்லை.