Home NEWS உதயநிதி ஸ்டாலின் நடிப்பின் இருந்து விலக திட்டமிட்டுள்ளாரா..? சோகத்தில் ரசிகர்கள்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பின் இருந்து விலக திட்டமிட்டுள்ளாரா..? சோகத்தில் ரசிகர்கள்.

udhayanithi stalin

சென்னை செம்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதியை சில நாட்களாக தொகுதிக்குள் காணமுடியவில்லை என்பதால் தொகுதி மக்கள் பலரும் கோரிக்கை மனுக்களை அவரது வீடு தேடி சென்றனர். மனுக்களை பெற்ற உதயநிதி குடும்பத்தினரும் திமுகவினரும் எம்எல்ஏ படப்பிடிப்புக்கு போய் இருக்காரு சில நாட்களை வந்துடுவாரு, உங்களை நேரில் சந்திப்பார் என்று கூறி அனுப்புகின்றனர். இப்படி தினமும் வீட்டுக்கே மக்கள் வருவது உதயநிதியின் தந்தையும் முதல்வருமான ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றது.

இதை அடுத்து உதயநிதியிடம் பேசிய ஸ்டாலின் கட்சி வேலையும், எம்எல்ஏ பொறுப்பும் அதிகமாக இருக்க தொடர்ந்து ஏன் நடிக்கிறாய் என கேட்டுள்ளார். நடித்தது போதும் தீவிரமாக அரசியலில் வேலை பார் என்று கூறியுள்ளார். இதனால் தற்போது நடித்து வரும் மூன்று படங்களை விரைவாக முடித்து விட்டு அதன்பின் சினிமாவிற்கு தற்காலிகமாக முழுக்கு போட உதயநிதி திட்டம் போட்டுள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார். அந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை இருந்தாலும் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இன்னும் சில நாட்களுக்குள் மொத்த படமும் முடிந்து விடும் அடுத்து கனா பட இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் ஆர்டிகிள் 15 என்ற மொழிமாற்று படத்தில் உதயநிதி நடிக்க உள்ளார். இதை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.

சினிமாவில் இருந்து தற்காலிகமாக தங்குவதற்கு முன் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த ஒரு சிறந்த படமாக மாரி செல்வராஜ் படம் இருக்கும் என உதயநிதி நம்புகிறார். மாரிசெல்வராஜ் படத்தை முடித்த பின் முழு நேரமும் அரசியலில் உதயநிதி கவனம் செலுத்துவார். அதிகபட்சம் நான்கு மாதம் மட்டுமே சினிமா நடிகராக உதயநிதி இருப்பார் என கூறப்படுகிறது.

Exit mobile version