பிரபல மலையாள நடிகையை ஓடும் காரில் பலாத்காரம் வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது நடிகர் திலீப் இரண்டாவது மனைவி காவியா மாதவன் இடம் விசாரணை நடைபெற்ற நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில் நடிகர் திலீப்பின் முதல் மனைவியான மஞ்சு வாரியரை கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தனியார் ஹோட்டலில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். பிரபல கேரளா நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு ஓடும் காரில் பலாத்காரம் செய்த வழக்கு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. கேரளா போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த ஆதாரங்களை வைத்து திலீப்பை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். ஜாமீனில் வெளிவந்த திலீப் ஆதாரங்களை அளிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின.
மேலும் அவரது செல்போனில் டெலிட் செய்யப்பட்ட 2 லட்சம் போட்டோக்கள், 11000 வீடியோக்களை சைபர்கிரைம் மீட்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் திலீப் இரண்டாவது மனைவி காவியா மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் விசாரிக்க சம்மன் அனுப்பினர்.
ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தட்டிக்கழித்து வருகிறார். ஆகையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் திலீப் விவாகரத்து செய்த முதல் மனைவியான மஞ்சு வாரியர் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2022 ஆம் தேதி மாலை தனியார் ஹோட்டலில் போலீசார் விசாரணை நடத்தினர்.
சமீபத்தில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் திலீப், மஞ்சு வாரியர் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் மூன்றரை மணி நேரமாக நடத்தப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது என கூறப்படுகிறது.
நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு எதிராக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆதரவாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.