Home NEWS உண்ண உணவின்றி சுருண்டு கிடக்கும் சாலை ஓர மக்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்…!!! நெகிழ்ச்சி சம்பவம்...

உண்ண உணவின்றி சுருண்டு கிடக்கும் சாலை ஓர மக்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்…!!! நெகிழ்ச்சி சம்பவம் குவியும் பாராட்டுக்கள்.

thiruthuraipoondi youngster helps to poor

கொரோனா தற்காப்புக்காக அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர்கள் அவர்களது குடும்பத்தினரை விட்டு நமக்கு அந்த நோய் தொற்று பரவாமல் இருக்க போராடி வருகின்றனர். இந்நிலையில் தங்க இடம் இன்றி வீதியில் படுத்து உறங்கும் ஆதரவு அற்ற மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். பசியால் வாடி சுருண்டு படுத்து கிடக்கும் நிலையில் அவர்கள் தவித்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி நகரில் வசித்து வரும் கமல் என்ற சமூகஆர்வலர் இந்த நிலையில் வாடி இருக்கும் ஆதரவற்ற சாலை ஓர மக்களை பார்த்து தன்னால் இயன்ற உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதன் பின் பசியால் வாடும் அந்த மக்கள் எங்கு உள்ளார்களோ அவர்களை தேடி சென்று 15 நாட்கள் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார். காலை மற்றும் மதியம் உணவு வழங்கி வரும் இவரிடம் இந்த நிலையில் எப்படி இரு வேலை உணவு அளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ” சாலை ஓரத்தில் பசியில் அமர்ந்து சுருண்டு கிடக்கும் போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்களும் மனிதர்கள் தானே அதனால் என்னால் முடிந்த வரை இதை தொடர்ந்து செய்வேன்” என்று கூறினார்.

கொரோனா தொற்று பரவி வரும் இந்நிலையில் ஆதரவு அற்ற மக்களையும் அவரது வலிகளையும் யோசித்து அவருக்கு உதவி வரும் கமல் என்பவருக்கு பொதுமக்களிடம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Exit mobile version