Home CINEMA NEWS நயன்தாரா திரிஷா இடையே பிரச்சனைக்கு காரணம் இது தான்…!!! இரவு நேர பார்ட்டிக்கு பின்னும் தொடரும்...

நயன்தாரா திரிஷா இடையே பிரச்சனைக்கு காரணம் இது தான்…!!! இரவு நேர பார்ட்டிக்கு பின்னும் தொடரும் பிரச்சனை…!!!

nayanthara trisha problem circulated in cini industry

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை. நயன்தாராவிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு நடிகை திரிஷாவிற்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். திரிஷா ஜோடி என்ற படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்து இருந்தார். அதன்பின் தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே, மனசெல்லாம், லேசா லேசா, சாமி போன்ற தொடர் படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

ஒரு நேரத்தில் திரிஷாவிற்கு ஆக தவம் கிடந்த தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள் நடிகர்களும் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு திரிஷா மார்க்கெட் பெரிதாக இருந்தது.

த்ரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பேசப்படும் செய்தி திரிஷா நயன்தாராவிற்கு இடையே ஏற்பட்ட விரிசலை பற்றி தான். திரிஷா சினிமா துறையில் 1999 ஆம் ஆண்டு வந்து விட்டார்.

நயன்தாரா 2005ஆம் ஆண்டு தான் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நயன்தாராவை விட சீனியர் நடிகை பல வெற்றி படங்களை கொடுத்த நடிகையை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்காமல் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைத்து வருவது திரிஷா தரப்புக்கு சற்று வருத்தமாகவே வந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முதலில் சமந்தாவிற்கு பதில் நடிக்க இருந்தது நடிகை திரிஷா தானாம். நயன்தாராவின் காதலர் நயன்தாராவிற்கு தான் முக்கியத்துவம் இருக்கும் என்று யோசித்தாரோ என்னமோ திரிஷா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் அதன்பின் அந்த வாய்ப்பை சமந்தா தட்டிச் சென்றார்.

கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் திரிஷா நயன்தாராவின் பிளாப் படங்களை பட்டியலிட்டு காட்டி இவ்வளவு படங்கள் பிளாப் கொடுத்திரக்கிறார் அவர் எப்படி லேடி சூப்பர் ஸ்டார் ஆக முடியும் என்று விவாதித்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே நயன்தாரா திரிஷா இருவருக்கும் இடையே சற்று விரிசல் ஏற்பட்டு மீண்டும் ஒரு இரவு நேர பார்ட்டியில் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டார்கள். அத்துடன் இவர்களின் பிரச்சனை முடியும் என்று எதிர்பார்த்தால் இன்றும் தொடர்கிறது.

தற்பொழுது திரிஷா பொன்னியின் செல்வன் மணிரத்தினம் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

Exit mobile version