Home NEWS அதிமுக கூட்டணியில் இருந்து விலகியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாமக கட்சி…!!! கட்சியினர்...

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாமக கட்சி…!!! கட்சியினர் கடும் அதிருப்தி.

PMK Ramadoss

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாமகவுக்கு ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி கூட கிடைக்காது கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக சட்டமன்ற தேர்தலை சந்தித்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 , 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சி தேர்தலை சந்திக்கப் போவதாக திடீரென அறிவித்தது. பாமகவின் இந்த அறிவிப்பு அதிமுக தலைவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது பாமக மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பேசினர்.

இந்நிலையில் வடமாவட்டங்களில் பாமகதான் செல்வாக்காக உள்ளது என்றும் எனவே தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியை பெற வாய்ப்பு இருப்பதாக பாமக கருதியது. அதனடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்தித்து வடமாவட்டங்களில் கணிசமாக வெற்றி வாய்ப்பை மாபெரும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறி வந்தார். ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக எதிர்பார்த்த வெற்றியைக் கூட பெற முடியவில்லை மாவட்ட கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்தைக்கூட பாமகவால் பிடிக்க முடியாமல் போனது.

பாமக சார்பில் போட்டியிட்டவர்கள் 43 பேர் ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வடமாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டதால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம் என்று பாமகவின் கனவு தவிடுபொடியானது அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் நாம் தமிழர், மக்கள் நீதி மையம் கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இது இந்த கட்சிகளுக்கு அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாமகவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version