தளபதி விஜய் தமிழ்நாட்டில் இவருக்கு உள்ள ரசிகர் பட்டாளத்தை பார்த்து பிரமித்துப் போய் உள்ளார்கள் பிற நடிகர்கள். தமிழ்நாட்டில் எவ்வளவு விஜய் மீது ரசிகர்கள் அன்பு வைத்திருக்கிறார்களோ அதேபோல கேரளாவிலும் விஜய் படங்கள் என்றால் குடும்பத்துடன் விரும்பிப் பார்க்கும் மக்களும் இருக்கிறார்கள்.
இந்தக் கொரோனா நேரத்தில் தியேட்டருக்கு மக்கள் வரவு குறைவாக இருக்கிறது என்கின்ற காரணத்தால் நொந்து போயுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள். ஒரு சில படங்கள் வெளியானாலும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உண்மை ஒட்டுமொத்த தியேட்டர் உரிமையாளர்களின் கண் தற்பொழுது மாஸ்டர் படத்தின் மீது தான் உள்ளது.
மாஸ்டர் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிடுகிறார்களோ மக்கள் திரும்ப திரையரங்கிற்கு வருவார்கள் என்று நம்புகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கைதி படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தளபதி விஜயை வேறொரு பரிமாணத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர் ரசிகர்கள்.
மாஸ்டர் பொங்கலுக்கு வெளியானால் தான் மக்கள் பழையபடி திரையரங்கிற்கு வருவார்கள் என்று கூறுகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. இது ஒரு பக்கமிருக்க தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற போட்டி பல மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
முதலில் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது அதன்பின் ஒரு சில காரணங்களால் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் தற்பொழுது விஜயின் அடுத்த பட அறிவிப்பை சன்பிக்சர்ஸ் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
தளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை இயக்கும் நெல்சன் என்ற இயக்குனர். விஜய்யின் இந்த இயக்குனர் தேர்வு சற்று ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் தற்பொழுது விஜய் வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறார் என்பதே உண்மை. தளபதி 65 படத்தின் அறிவிப்பை ஒரு டைட்டில் கார்டு போட்டு வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அந்த டைட்டில் கார்டில் துப்பாக்கியுடன் தளபதி 65 என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.