தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார். ஒரு நேரத்தில் ரஜினிக்கு இருந்த மார்க்கெட்டை தாண்டி தற்போது விஜய்யின் மார்க்கெட் உள்ளது. ரஜினியைப் போல விஜய்க்கும் உலக அளவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் விஜயின் படங்கள் அவரது ரசிகர்களால் எப்படி கொண்டாடப்பட்டு வருகிறது அது போல கேரளாவிலும் விஜய்க்கு பெரிய வரவேற்பு உள்ளது. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் தலைவா என்ற படத்தை வெளியிட தடை விதித்தபோது விஜயின் ரசிகர்கள் கேரளா சென்று படம் பார்த்து உள்ளார்கள் அந்த நேரத்தில் விஜய் படத்திற்கு கேரள ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்து விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் திரை உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு தமிழ் நடிகருக்கு பிற மாநிலங்களில் இவ்வளவு ரசிகர்களா என்று பலர் எழுதி வந்தனர். விஜய் தெலுங்கு மார்க்கெட்டை பிடிப்பதற்கு சிரமப்படுவது உண்மையே. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு என்ற படத்தை கில்லி என்று ரீமேக் செய்தார் விஜய் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல தெலுங்கில் வெளியான போக்கிரி படம் தமிழில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியானது அந்தப் படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது ஆனால் தெலுங்குவில் சூர்யாவிற்கும் கார்த்திக்கும் உள்ள ரசிகர்கள் விஜய்க்கு இல்லை என்பது உண்மை.
காரணம் கார்த்தியும் சூர்யாவும் தங்களது படங்களில் தெலுங்கு ரசிகர்களை கவரும்படி காட்சிகள் வைப்பார்கள் ஆனால் விஜய் அப்படி செய்வதில்லை அதுமட்டுமல்லாமல் தங்கள் படங்களில் நடிப்பதற்கு தெலுங்குவில் பிரபலமான நடிகர் நடிகைகளை தேர்வு செய்வார்கள் அதனால் அவர்கள் இருவருக்கும் உள்ள வரவேற்பு விஜய்க்கு இல்லை என்பது உண்மை.
தற்பொழுது தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்டு உள்ளார் விஜய். அது என்னவென்றால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் தளபதி 65 படம் முடிந்த பிறகு அடுத்து விஜய் யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் உடன் திரும்ப இணைகிறார் என்ற செய்திகளும் வெளிவந்தது மற்றொரு பக்கம் அட்லி அவர்கள் விஜய்க்கு கதை ரெடி செய்து உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தது ஆனால் இது அனைத்தும் செய்திகளாகவே இருந்ததே தவிர அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை.
தற்பொழுது யாரும் எதிர்ப்பார்க்காத படி விஜய் ஒரு முடிவு எடுத்துள்ளார் அதாவது விஜயின் அடுத்த படம் தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சி பைடிபல்லி இயக்குகிறார். விஜயும் வம்சியும் இணையும் படத்தை தில் ராஜு என்ற பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளார்.
வம்சி ஏற்கனவே பிருந்தாவனம் மகரிஷி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அதுபோல தமிழில் வெளியான தோழா படத்தையும் அவர் தான் இயக்கினார்.
விஜயின் இந்த திடீர் முடிவு தெலுங்கு மார்க்கெட்டையும் பிடிப்பதற்காக தான் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தினர். விஜய்யின் அடுத்த படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கொரோனா காலம் முடிந்தவுடன் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் அந்த படத்தை இயக்கும் இயக்குனர்.