தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மௌனம் காத்து வருகிறார் விஜய். விஜயின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறார்கள்.
விஜய்யிடம் அனுமதி பெற்று நடந்து முடிந்த தமிழ்நாடு உள்ளாட்சி
தேர்தலில் பல இடங்களில் விஜய் ரசிகர்கள் நின்றார்கள். விஜய் ரசிகர்கள் பல இடங்களில் ஜெயித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக 129 பேர் வெற்றியும் பெற்றனர்.
விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள் விஜய் எப்போது அரசியலில் இறங்க போகிறார் என்று அனைவரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது அந்த தேர்தலின் முடிவுகள். விஜய் ரசிகர்கள் பெற்ற வெற்றி பிற கட்சியினர் பார்வையை விஜய் மீது திருப்பியது. அரசியலில் கவனமாக காய் நகர்த்தும் விஜய். அடுத்த கட்டமாக நகராட்சி தேர்தலில் தனது ரசிகர்கள் நிற்க அனுமதி கொடுத்துள்ளார்.
தற்பொழுது நடக்கவிருக்கும் தேர்தலில் ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் இறங்கி வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
விஜய் மக்கள் இயக்கம் திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் மற்றும் அவரது குழுவினர் ஒன்றுகூடி ஒவ்வொரு வீடாக சென்று உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்துக்கொள்ளுங்கள் வாக்களியுங்கள் என்று கேட்டு வருவதோடு தம்பி எனக்கு இந்தப் பிரச்சனை என்று கூறினால் ஓடி வந்து நிற்போம் என்று நம்பிக்கையும் கொடுத்து வருகிறார்கள். அதற்கு மக்கள் சின்ன புள்ளைங்க நீங்க தான் நிக்கணும் உங்களுக்கு நாங்க ஓட்டு போடுறோம் என்று கூறி வருகின்றனர்.
இளைஞர்கள் வந்தால் நன்றாகத்தானே இருக்கும் என்று மக்களின் மனசும் மாற்றத்தை தேட விரும்புவதாக தகவல் அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மாபெரும் கட்சியான திமுக அதிமுக இருக்கையில் மூன்றாவதாக நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது. விஜய் அரசியலில் இறங்கினால் மக்கள் ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.