நயன்தாராவின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் நடந்து முடிந்துள்ளது. விஐபிக்கள் மட்டுமே நயன்தாராவின் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மண்டபத்தை சுற்றி தனியார் பாதுகாவலர்களை நிக்க வைத்திருந்தார்கள். மண்டபத்திற்குள் நுழைவதற்கு கூட க்யூ ஆர் கோடு இருந்தால் மட்டுமே நுழைய முடியும் அந்த அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தார்கள் நயன்தாராவிற்கு தரப்பு.
நயன்தாராவின் திருமணத்திற்கு ஷாருக்கான் வந்தது பெரிய ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது. அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் என்ற ஹிந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா தான் நடித்து வருகிறார் அதனால் ஷாருக்கான் சென்னை வந்து நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் என்று கூறிவருகிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.
அஜித் விஜய் இருவரும் திருமணத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்தின் குடும்பத்தினர் மட்டும் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி திருமணத்திற்கு வந்திருந்த ஷாருகான் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.