Home CINEMA NEWS கொரோனா பற்றி அன்றே சொன்ன நடிகர் ஜெய்ஷங்கர்…!!! ஒரு வேலை ஜெய் ஷங்கர் தான் பரப்பி...

கொரோனா பற்றி அன்றே சொன்ன நடிகர் ஜெய்ஷங்கர்…!!! ஒரு வேலை ஜெய் ஷங்கர் தான் பரப்பி இருப்பாரோ ரசிகர்கள் கமெண்ட்.

jaishankar viral video about corona

நடிகர் ஜெய்ஷங்கர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பழம்பெரும் நடிகர் என்றால் இவரையும் சொல்லலாம். இவருடைய நடிப்பு அந்த காலத்தில் மக்களை கவரும் வகையில் இருக்கும். அதனால் திரையில் இவருடைய பெயர் வரும் போது “மக்கள் தமிழன்” என்று போடுவார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழில் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் என்று செல்லமாக அழைப்பார்கள் இவர் நடித்த இவர் நடித்த CID ஷங்கர் மற்றும் வல்லவன் ஒருவன் போன்ற படங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் போல இருக்கும்.

இவருடைய முதல் படம் “இரவும் பகலும்” என்ற படம். அதன் பின் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்ட ஜெய் ஷங்கர்.2000 ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக் வந்து 61 வயதில் உயிர் இழந்தார்.

ஜெய் ஷங்கர் எந்த ஒரு விளம்பரம் இன்றி ஏழைகளுக்கு உதவியை செய்து வந்தார். தற்பொழுது அவருடைய மகன் விஜய் ஷங்கர் 15 நபர்களுக்கு தனது தந்தையின் பிறந்த நாள் அன்று கண் அறுவை சிகிச்சைக்கு உதவி வருகிறார்.

சமீபத்தில் ஜெயசங்கர் அவர்கள் நடித்த படம் ஒன்றின் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. அந்த காட்சியில் வைரஸ் கிருமி ஒன்றை கண்டு பிடித்து அதனை பால் மற்றும் உணவில் பரப்பி விடுவோம் அதனை உட்கொள்ளும் மக்கள் நோய் வந்து சிரமப்படுவார்கள்.

இதையும் படிங்க: சந்தானத்தின் முதல் படம் இந்த இறந்த நடிகரின் படமா…!!! முதல் படத்திலே செம அழகாக இருக்கும் சந்தானம் புகைப்படங்கள் உள்ளே.

அந்த நேரத்தில் நம்மிடம் மருந்துகள் வாங்க வேண்டிய நிலை வரும் என்பார். அவர் சொல்லும் அந்த வசனங்கள் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இவர் பேசிய அனைத்தும் கொரோனவை குறிக்கிறது. இந்த வீடியோவை நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை ஜெய் ஷங்கர் தான் பரப்பிவிட்டு இருப்பாரோ என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Exit mobile version