சுஷாந்த் சிங் ஹிந்தி படவுலகில் பிரபலமான நடிகர் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. 34 வயதான இவர் Kai Po Che! என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார் அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்கள் நடித்து வந்த அவர் எம்எஸ் தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வந்தார் .
அந்தப் படம் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழிலும் பெரிய வரவேற்பை பெற்றது அதனைத் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் 2020 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
சுஷாந்த் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும் சிலர் சுஷாந்த் மரணம் தற்கொலை அல்ல யாருடையவது தூண்டுதலாக இருக்கலாம் அல்லது கொலையாக இருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் வெளிவர தொடங்கியது. இது ஒரு புறமிருக்க சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது அனைவரும் அறிந்ததே.
நேற்று சுஷாந்த் அவர்களின் குடும்பத்தினர் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சுஷாந்த் குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருக்கும் போது காலி எல்பிஜி சிலிண்டர்கள் ஏற்றப்பட்ட லாரி மீது மோதி ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் இறந்தவர்கள் சுஷாந்த் சொந்தக்காரர்கள் என்று தெரியவந்துள்ளது.
இறுதி சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய போது கார் விபத்தில் ஒரே குடும்பமே பலியாகிய சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது.